லட்சாதிபதி பெண்ணை ஏமாற்றிய கிளி ஜோதிடர்

லட்சாதிபதி பெண்ணை ஏமாற்றிய கிளி ஜோதிடர் கைது: உல்லாசமாக பணத்தை செலவு செய்ததாக வாக்குமூலம்

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சகாயராணி (வயது 40). இவர், சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: 
நான், சூளைமேட்டில் கடந்த 10 வருடங்களாக வசித்து வருகிறேன். எனது கணவர் ஜப்பானில் ஓட்டல் ஒன்றில் வேலைபார்க்கிறார். வருடத்துக்கு ஒருமுறை அவர் சென்னை வந்து செல்வார். எனக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கிறார்கள். சொந்த வீட்டில் நான் வசித்து வருகிறேன். 2 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளேன். சமீபகாலமாக எனக்கு அடிக்கடி குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. உடல்நலக் குறைவாலும் அவதிப்பட்டேன்.


இந்த நிலையில், சென்னை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த கிளி ஜோதிடர் குருசாமி (38) என்பவர், என்னை சந்தித்தார். அவரிடம் ரூ.10 காணிக்கையாக கொடுத்து கிளி ஜோதிடம் பார்த்தேன். கிளி ஜோதிடத்தில் கிளி எடுத்துக்கொடுத்த படத்தில் எனக்கு நாகப்பாம்பு படம் வந்தது. உடனே ஜோதிடர் குருசாமி, உங்களுக்கு நேரம் சரியில்லை. அதனால்தான் கிளி பாம்பு படத்தை எடுத்துக்கொடுத்துள்ளது. உங்களுடைய உறவினர்கள் செய்வினை வைத்துள்ளனர். அதனால்தான் உங்களுக்கு பிரச்சினைமேல் பிரச்சினை வரும். உங்கள் வீட்டில் விசேஷ பூஜை செய்தால், செய்வினை கோளாறு நீங்கிவிடும். அதன்பிறகு நன்றாக இருப்பீர்கள் என்று கூறினார். விசேஷ பூஜை செய்ய ரூ.7 ஆயிரம் செலவாகும் என்றார்.
அவர் சொன்னதை நம்பி, ரூ.7 ஆயிரம் பணம் கொடுத்தேன். குருசாமியும் பரிகார பூஜை செய்தார். வீட்டு வாசலில் கட்டி தொங்கவிடும்படி மாந்திரீக பித்தளை தகடு ஒன்றையும் கொடுத்தார். அதை வீட்டு வாசலில் கட்டி தொங்கவிட்டேன். பூஜை செய்த விஷயத்தை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், அவ்வாறு சொன்னால் பூஜை பலிக்காது என்றும் அவர் கூறினார். 
ஆனால், குருசாமி சொன்னபடி எனக்கு பிரச்சினை எதுவும் தீரவில்லை. தொடர்ந்து நோய்நொடிகள் வந்து கஷ்டப்பட்டேன். மீண்டும் அவர், என்னை சந்தித்தார். எனக்கு பிரச்சினை தீரவில்லையே என்றேன். பிரச்சினை தீருவதற்கு லட்சுமி பூஜை செய்யவேண்டும் என்று கூறினார். லட்சுமி பூஜை என்றால் அதில் கட்டுக்கட்டாக பணமும், தங்க நகைகளையும் பூஜையில் வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். 3 முறை அதுபோல் பூஜை செய்தால் கஷ்டம் விலகி, வீட்டில் லட்சுமி குடியேறுவாள் என்றும், லட்சுமி குடியேறிவிட்டால் இப்போது லட்சாதிபதியாக இருக்கும் நீங்கள், கோடீசுவரியாக ஆகலாம் என்றும் கூறினார்.
இதையும் நான் உண்மை என்று நம்பினேன். அவர் சொன்னபடி 3 முறை லட்சுமி பூஜை செய்தார். எனக்கு சொந்தமான 2 வீடுகளை அடமானம் வைத்து ரூ.25 லட்சம் பணத்தை பூஜையில் வைத்தேன். 50 சவரன் நகைகளையும் பூஜைக்காக கொடுத்தேன். இப்படியாக கடந்த 2 வருடங்களாக அவர் இந்த பூஜைகளை நடத்தி, பூஜையில் வைத்த ரூ.25 லட்சம் பணத்தையும், 50 சவரன் நகைகளையும் சுருட்டிவிட்டார். அவர் ஒரு மோசடி பேர்வழி என்று எனக்கு இப்போதுதான் தெரிய வந்தது. அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, எனது நகைகளையும், பணத்தையும் மீட்டுத்தரும்படி வேண்டுகிறேன். இவ்வாறு புகார் மனுவில் சகாயராணி கூறியிருந்தார்.
இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தும்படி கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். கிளி ஜோதிடர் குருசாமி கைது செய்யப்பட்டார். அவர்மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரிடமிருந்து 50 சவரன் நகைகளும், ரூ.1 லட்சம் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றினார்கள்.
மோசடி பூஜை செய்த கிளி ஜோதிடர் குருசாமி, போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
எனக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சகாயராணி அளவுக்கு மீறி ஜோதிட நம்பிக்கை வைத்திருந்தார். அதை பயன்படுத்தித்தான் அவரிடம் பணம் மோசடி செய்தேன். அவரை மோசடி செய்து சம்பாதித்த ரூ.25 லட்சம் பணத்திலும் குடும்பத்தோடு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றேன். பல ஊர்களில் கோவில்கள் கட்டவும் பணம் நன்கொடை கொடுத்தேன். நட்சத்திர ஓட்டல்களில் தங்கி உல்லாசமாக இருந்தேன். இவ்வாறு குருசாமி கூறியதாக போலீசார் தெரிவித்தனர். 
 லட்சாதிபதி பெண்ணை ஏமாற்றிய கிளி ஜோதிடர் கைது: உல்லாசமாக பணத்தை செலவு செய்ததாக வாக்குமூலம் சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சகாயராணி (வயது 40). இவர், சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நான், சூளைமேட்டில் கடந்த 10 வருடங்களாக வசித்து வருகிறேன். எனது கணவர் ஜப்பானில் ஓட்டல் ஒன்றில் வேலைபார்க்கிறார். வருடத்துக்கு ஒருமுறை அவர் சென்னை வந்து செல்வார். எனக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கிறார்கள். சொந்த வீட்டில் நான் வசித்து வருகிறேன். 2 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளேன். சமீபகாலமாக எனக்கு அடிக்கடி குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. உடல்நலக் குறைவாலும் அவதிப்பட்டேன். இந்த நிலையில், சென்னை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த கிளி ஜோதிடர் குருசாமி (38) என்பவர், என்னை சந்தித்தார். அவரிடம் ரூ.10 காணிக்கையாக கொடுத்து கிளி ஜோதிடம் பார்த்தேன். கிளி ஜோதிடத்தில் கிளி எடுத்துக்கொடுத்த படத்தில் எனக்கு நாகப்பாம்பு படம் வந்தது. உடனே ஜோதிடர் குருசாமி, உங்களுக்கு நேரம் சரியில்லை. அதனால்தான் கிளி பாம்பு படத்தை எடுத்துக்கொடுத்துள்ளது. உங்களுடைய உறவினர்கள் செய்வினை வைத்துள்ளனர். அதனால்தான் உங்களுக்கு பிரச்சினைமேல் பிரச்சினை வரும். உங்கள் வீட்டில் விசேஷ பூஜை செய்தால், செய்வினை கோளாறு நீங்கிவிடும். அதன்பிறகு நன்றாக இருப்பீர்கள் என்று கூறினார். விசேஷ பூஜை செய்ய ரூ.7 ஆயிரம் செலவாகும் என்றார். அவர் சொன்னதை நம்பி, ரூ.7 ஆயிரம் பணம் கொடுத்தேன். குருசாமியும் பரிகார பூஜை செய்தார். வீட்டு வாசலில் கட்டி தொங்கவிடும்படி மாந்திரீக பித்தளை தகடு ஒன்றையும் கொடுத்தார். அதை வீட்டு வாசலில் கட்டி தொங்கவிட்டேன். பூஜை செய்த விஷயத்தை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், அவ்வாறு சொன்னால் பூஜை பலிக்காது என்றும் அவர் கூறினார். ஆனால், குருசாமி சொன்னபடி எனக்கு பிரச்சினை எதுவும் தீரவில்லை. தொடர்ந்து நோய்நொடிகள் வந்து கஷ்டப்பட்டேன். மீண்டும் அவர், என்னை சந்தித்தார். எனக்கு பிரச்சினை தீரவில்லையே என்றேன். பிரச்சினை தீருவதற்கு லட்சுமி பூஜை செய்யவேண்டும் என்று கூறினார். லட்சுமி பூஜை என்றால் அதில் கட்டுக்கட்டாக பணமும், தங்க நகைகளையும் பூஜையில் வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். 3 முறை அதுபோல் பூஜை செய்தால் கஷ்டம் விலகி, வீட்டில் லட்சுமி குடியேறுவாள் என்றும், லட்சுமி குடியேறிவிட்டால் இப்போது லட்சாதிபதியாக இருக்கும் நீங்கள், கோடீசுவரியாக ஆகலாம் என்றும் கூறினார். இதையும் நான் உண்மை என்று நம்பினேன். அவர் சொன்னபடி 3 முறை லட்சுமி பூஜை செய்தார். எனக்கு சொந்தமான 2 வீடுகளை அடமானம் வைத்து ரூ.25 லட்சம் பணத்தை பூஜையில் வைத்தேன். 50 சவரன் நகைகளையும் பூஜைக்காக கொடுத்தேன். இப்படியாக கடந்த 2 வருடங்களாக அவர் இந்த பூஜைகளை நடத்தி, பூஜையில் வைத்த ரூ.25 லட்சம் பணத்தையும், 50 சவரன் நகைகளையும் சுருட்டிவிட்டார். அவர் ஒரு மோசடி பேர்வழி என்று எனக்கு இப்போதுதான் தெரிய வந்தது. அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, எனது நகைகளையும், பணத்தையும் மீட்டுத்தரும்படி வேண்டுகிறேன். இவ்வாறு புகார் மனுவில் சகாயராணி கூறியிருந்தார். இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தும்படி கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். கிளி ஜோதிடர் குருசாமி கைது செய்யப்பட்டார். அவர்மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரிடமிருந்து 50 சவரன் நகைகளும், ரூ.1 லட்சம் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றினார்கள். மோசடி பூஜை செய்த கிளி ஜோதிடர் குருசாமி, போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சகாயராணி அளவுக்கு மீறி ஜோதிட நம்பிக்கை வைத்திருந்தார். அதை பயன்படுத்தித்தான் அவரிடம் பணம் மோசடி செய்தேன். அவரை மோசடி செய்து சம்பாதித்த ரூ.25 லட்சம் பணத்திலும் குடும்பத்தோடு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றேன். பல ஊர்களில் கோவில்கள் கட்டவும் பணம் நன்கொடை கொடுத்தேன். நட்சத்திர ஓட்டல்களில் தங்கி உல்லாசமாக இருந்தேன். இவ்வாறு குருசாமி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.