லட்சாதிபதி பெண்ணை ஏமாற்றிய கிளி ஜோதிடர் கைது: உல்லாசமாக பணத்தை செலவு செய்ததாக வாக்குமூலம்
சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சகாயராணி (வயது 40). இவர், சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
நான், சூளைமேட்டில் கடந்த 10 வருடங்களாக வசித்து வருகிறேன். எனது கணவர் ஜப்பானில் ஓட்டல் ஒன்றில் வேலைபார்க்கிறார். வருடத்துக்கு ஒருமுறை அவர் சென்னை வந்து செல்வார். எனக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கிறார்கள். சொந்த வீட்டில் நான் வசித்து வருகிறேன். 2 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளேன். சமீபகாலமாக எனக்கு அடிக்கடி குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. உடல்நலக் குறைவாலும் அவதிப்பட்டேன்.